Tuesday 26 May 2009

"தனியே

நடைபயிற்சிக்கு

போகிறேன்" என

கவலை கொள்ளும்

உறவினுக்கு

எப்படி

புரியவைப்பது

ஆகாய

அழகனும்

உடன் வருவதை...!

தயங்கி தயங்கி

எனை

தழுவிக் கொண்டிருக்கும்

தூக்கத்தினை

கொஞ்சமும்

தயங்காமல்

துரத்திகொண்டிருக்கிறது

உனது

நினைவு.....!

இயல்பினை

இழந்து

தவிக்கும்

எனைப் பார்த்து

பரிகசித்தபடி

எனது

சுயத்தினை

கொன்றுவிட்டு

தனது

இருப்பினை

பதிவு செய்கிறது

இந்த காதல்!

ஏற்றுக்கொள்ளப்படாத

மன்னிப்பினுக்கு....

இணையாகின்றன....

உனக்கான

எனது

கடிதங்கள்!

Friday 22 May 2009

பொம்மைக்காய்

அடம்பிடித்து

கடையினின்று

நகர மறுக்கும்

குழந்தையாய் - நீ

எனை

நீங்கி சென்ற

இடத்தினின்று

அசைய மறுக்கும்

மனம்......!

உனை

சந்திக்கப் போவதான

எதிர்பார்ப்புடன்

தொடங்குகின்ற

தினங்கள்

ஏக்கத்துடன்

முடிவடைகின்றன!

ஒரு வழிப் பாதையென

தெரிந்த பின்னும்

தொடர்கின்றது

பயணம்.....

எதிரினில் - நீ

வருவாயெனும்

குருட்டு நம்பிக்கையில்!


விட்டு விலகி

நெடுந்தொலைவு

வந்தபின்னும்

காலடியில்

குறுகுறுக்கிறது

கடற்கரை மணல்....

நின் நினைவுகள்!

Sunday 10 May 2009

காற்றில்
மிதக்கின்றன
பூமிப் பந்துகள்...
துரத்தியபடி
ஓடிக் கொண்டிருக்கிறாள்
சிறுமி




.
விரல்கள்
என்னவோ
என்னுடையவைதான்....
ஸ்பரிசம் மட்டும்
உனதாக
உணர்கிறேன்




.