Friday 18 December 2009
ஒன்றா? இரண்டா?
"பெடம்மா (பெரியம்மா)
அத புடி"
காதினில் விழுகிறது - எனது
சின்னஞ்சிறு தேவனின் குரல்,
நடந்து செல்லும் என்னை
கடந்து செல்கிறது ஒரு ஆட்டுக்குட்டி!
"குடு (குரு) phone ஐ எங்க?"
குட்டி நண்பனின்
கேள்வியாய் ஒலிக்கிறது,
செல்லிடபேசியின் மணியோசை!
"அம்மாதான் என் best friend"
என் பாலாவின்
வார்த்தைகளாய் விரிகிறது,
நண்பர்கள் தினத்தின்
குறுஞ்செய்தி வாழ்த்துகள்!
"பிச்சி பூ ன்னா
உனக்கு பைத்தியமாச்சே
அதான் வாங்கினேன்" - என்னும்
பூங்கொடி அத்தையின்
பிம்பம் தெரிகிறது,
நீர் நிறைந்து ஓடும்
தாமிரபரணியில்!
"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!
"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"
(‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)
Monday 14 December 2009
புன்னகை வெளிச்சம்
Sunday 6 December 2009
நானும் நீயும்
Wednesday 2 December 2009
நீலவானம்
Subscribe to:
Posts (Atom)