உனது
குரலை
நினைவுறுத்தும்
காதினில் விழும்
வார்த்தைகள்...
உனது
இயல்பினை
பதிவு செய்யும்
கண்களில் நிறையும்
காட்சிகள்...
கவிதை
கற்றுத்தரும்
உனது
மௌனங்கள்...
இதழ்கோடியில்
சிறுபுன்னகையை
நெளியவிடும்
உனது
குறுந்தகவல்கள்...
நாம்
சந்தித்த
உச்சிவெயிலின்
வெம்மை கூட
வாழ செய்கிறது
நமது
நட்பினை...!