துளி 4
'விலகிப் போய்விடு
என்னிலிருந்து'
என்றபடியே
துரத்திக் கொண்டிருக்கிறாய்
துளி 5
மௌனமென்னும்
மென்கத்தி கொண்டு
உயிரறுக்கும்
மிதவாதி நீ
துளி 6
ஒரே புன்னகைதான்
சிறையாகவும்
சிறகாகவும்
.
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
5 weeks ago
