Saturday 22 May 2010

விடுதலை விரும்பி


தினம்தோறும் வாசலில்


ரங்கோலி கோலமிடுகிறாள்


வளைந்து நெளியும்


கோடுகளுக்குள்


புள்ளிகளை


சிறை வைக்க


விரும்பாமல்.

Monday 3 May 2010

வானவில் தருணம்.


நீள்கின்ற மௌனக்கோடு
இயம்புகிறது
இருவருக்குமான இடைவெளியை

சிறைப்பட்டிருக்கும் வார்த்தைகளை
விடுவிப்பதற்கான சாவி
உன்னிடமிருப்பதாய் நானும்
என்னிடமிருப்பதாய் நீயும்
பாவனை செய்கிறோம்

சிறு விசும்பல்
அழிக்கக் கூடும்
மௌனக் கோட்டினை

ஒற்றைத் துளி
உடைக்கக் கூடும்
சிறைக் கதவுகளை

ஊடல் உடைபடுமொரு
வானவில் தருணத்திற்கென
காத்திருக்கிறோம் உள்ளபடியே.

.

சிலைகள்

உயிர் நீத்த
பின்னும்
சிறைக்குள்ளேயே
எம் தலைவர்கள்.

.