Friday 18 December 2009
ஒன்றா? இரண்டா?
"பெடம்மா (பெரியம்மா)
அத புடி"
காதினில் விழுகிறது - எனது
சின்னஞ்சிறு தேவனின் குரல்,
நடந்து செல்லும் என்னை
கடந்து செல்கிறது ஒரு ஆட்டுக்குட்டி!
"குடு (குரு) phone ஐ எங்க?"
குட்டி நண்பனின்
கேள்வியாய் ஒலிக்கிறது,
செல்லிடபேசியின் மணியோசை!
"அம்மாதான் என் best friend"
என் பாலாவின்
வார்த்தைகளாய் விரிகிறது,
நண்பர்கள் தினத்தின்
குறுஞ்செய்தி வாழ்த்துகள்!
"பிச்சி பூ ன்னா
உனக்கு பைத்தியமாச்சே
அதான் வாங்கினேன்" - என்னும்
பூங்கொடி அத்தையின்
பிம்பம் தெரிகிறது,
நீர் நிறைந்து ஓடும்
தாமிரபரணியில்!
"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!
"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"
(‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)
Monday 14 December 2009
புன்னகை வெளிச்சம்
Sunday 6 December 2009
நானும் நீயும்
Wednesday 2 December 2009
நீலவானம்
Wednesday 11 November 2009
வீடும் கூடும்
Friday 6 November 2009
வாசனை எச்சம்!
நீ என் மார்பினில்
கிடந்துறங்கிய காலங்களில்
மேனியெங்கும் உடையென
படர்ந்திருந்தது உன் வாசனை.
எனை கட்டிக்கொண்டு
தூங்கிய போதுகளில்
எனதருகினில் இருக்கையிட்டு
அமர்ந்திருந்தது
அதே வாசனை.
தனித் தனி அறைகளில்
தூங்கிய போது
காற்றினில் வரும்
நறுமண புகையென
கரைந்து விட்டிருந்தது
அந்த வாசனை.
உனது மடியினில்
நானுறங்க வேண்டிய நாட்களிலோ,
நீராழி கடந்தொரு
தேசத்தில் நீயும்
நினைவுகளில் வாசனை
எச்சங்களோடு நானும்
.
Thursday 15 October 2009
ஒளியும் ஒலியும்
Tuesday 13 October 2009
ப(ம)றந்து போன பச்ச கிளி
பொத்திவச்ச மவ
எங்கண்ண மறச்சுப்புட்டு
காணாம போயிபுட்டா
நெஞ்சுக் குழிக்குள்ள
நெருப்பள்ளி போட்டு
நெல கொலய வச்சுப்புட்டா
பதியம் போட்டு
பாத்து பாத்து வளர்த்த
பட்டு ரோசா
பூத்து சிரிக்கறத
பாக்க காத்திருந்தேன்
கண்ணசந்த வேளையில
களவு போனதென்ன?
பாலூட்டி வளர்த்த
எம் பச்ச கிளி
பொல்லாத பூனையோட
கை புடிச்சு போனதென்ன?
பாவி மவளுக்கு பந்த பாசம்
இல்லாம போனதென்ன?
பைத்தியம் புடிச்சதாட்டம்
நான் பரிதவிச்சு நிப்பதென்ன?
.
Friday 9 October 2009
பகிர்ந்துகொண்ட விருது.
ராஜாராம் அண்ணா எனக்கு பகிர்ந்தளித்த இந்த விருதினை நான் இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1. +ve அந்தோணிமுத்து - இனிய +VE அந்தோணி முத்து
2. வேல்கண்ணன் - வேல் கண்ணன்
3. கார்த்திகா - நேயமுகில்
4. சாம் தாத்தா - சாம் தாத்தாவின் சிந்தனைகள்
5. தமயந்தி - தமயந்தி - நிழல் வலை
6. வேல்ஜி---ஜெயபேரிகை
7. அருண் - கார்ல்ஸ்பெர்க் வார்த்தைகள்
8. ஞானியார் ரசிகவ் - நிலவு நண்பன்
Thursday 8 October 2009
நன்றி : கல்கி.
நடக்கும்போது
சுகமாய்த்தானிருந்தது,
உன் கரம் பற்றியிருந்தேன்...
ஏனோ
இப்போது
வலிக்கின்றன
கால்கள்,
தனிமையில் நான்!
Thursday 1 October 2009
தவிக்கும் உயிர்.
சரமாரியாய்
தொடுக்கின்றாய்
விஷம் தோய்த்த உன்
வார்த்தைக் கணைகளை.
மழைக் கம்பிகளை
ஏந்துதல் போலும்
தாங்கிக் கொள்கிறேன் நான்.
அனுதினமும் எனை
அபிஷேக்கிறாய்
அனலேறிய உன் பார்வையால்.
நெருப்பினை விழுங்கிவிட்டு
நீரினைக் குடித்து
தணித்துக் கொள்கிறேன்.
சாவினைச் சுமந்தென்னை
துரத்துகின்ற
என்னிடமிருந்தான உன்
விலகலுக்கும்
வாழ்வினை நோக்கி எனை
இழுத்துச் செல்லும்
உன் மீதான என்
காதலுக்குமிடையில்
சிக்கித் தவிக்கிறது
எனது உயிர்.
.
Friday 25 September 2009
இன்றும் மழை நாள்தான்..!
சிறு சிறு வார்த்தைகள்
உனதன்பை வெளிப்படுத்திய- அந்த
மழையும் நம்மிருவருடன்
இன்றும் மழை நாள்தான்.....!
மழையில் நனைந்தபடி நானும்
நீ மட்டுமில்லாத தனிமையில்.......?
Wednesday 23 September 2009
வலியும் வலிமையும்
Tuesday 22 September 2009
பிள்ளைப்பருவம்
கொஞ்சமென்றாலும்
வாழ்ந்த பொழுதுகள்
அதிகம்தான்.......
முடிவில்
மனம் கனத்தாலும்
ஒன்றுமில்லாததாய்
வெறுமையான உணர்வு!
நிலைத்திருக்கும்
நிஜமில்லை,
கரைந்து விடும்
கானல்தான்....
ஆயினும்
போ(வே)கும் வரையிலும்
தித்திடும் எண்ணங்கள்!
விடுமுறை முடிந்து
பள்ளி செல்கையில்
முதுகில்
புத்தகச் சுமையோடு,
இனிமையான நாட்கள்
மனதிலும்........
வேலைக்குப் போகும்
இன்று வரையிலும்
அந்த
கோடைவசந்தம்
எனக்குப்
பிள்ளைப்பருவம்தான்!
Wednesday 16 September 2009
அம்மாச்சி
இருக்கக் கூடும் - ஒரு
கதை சொல்லி!
எங்கள் வீட்டிலும்
இருந்ததுண்டு.
மந்திர தந்திர
கதைகளில்
ஆர்வம் வளர்த்தவள்....
நிலாச் சோற்றின்
சுவை காட்டியவள்....
பெண்மையின் வரம்புகள்
அறிவுறுத்தியவள்....
தாய்மையின் அருமையை
உணர்த்தியவள்.....
அம்மாவுக்கு மட்டுமில்லாமல்
எனக்கும்
அம்மாவானவள்...
இருந்தவரையில்
இதமளித்ததில்லை நான்.....
ஏனோ இப்போது
தவிக்கின்றேன்....
கடைசியாய்
கொடுத்து போன
புடவையில்
அவள் வாசம்
உணர்கிறேன்!
Saturday 12 September 2009
வாழ்வின் உயிர்
Wednesday 9 September 2009
புரிதல் என்னும் இழை
வார்த்தைகள் மரித்துப் போக
வாய் மூடி மௌனியாகின்றோம்
உனது தரப்பை நீயும்
எனது தரப்பை நானும்
மௌனத்தால் வாதிடுகிறோம்
'சாப்பிட்டாச்சா?'
'கடைக்கு கிளம்பியாச்சா?'
'தலைவலி சரியாகிடுச்சா?'
வந்து விழுகின்றன
கேள்விகள்
சம்பிரதாயமாய்...
புரிதல் என்னும்
இழைதான்
இழுத்து நிறுத்துகிறது,
எதிரெதிர் துருவங்களை
நோக்கி நகர்கின்ற
நம்மையும்
நம் நட்பினையும்!
Monday 7 September 2009
Friday 4 September 2009
சில கூடுகளும் - ஒரு கூண்டும்
Thursday 3 September 2009
கண்ணாடி நட்பு
Wednesday 2 September 2009
தோழன்
Tuesday 1 September 2009
மௌனம் போதும்..!
காதலைச்
சிதைக்கும்
வார்த்தையாடல்களினை
விடவும்.
நினைவுகளின்
துணையுடன்
வாழ்வினுக்கு
உயிரூட்டும்
நம் மௌனம்
போதும் நமக்கு
.
உனதுறவு
பலமும்
பலவீனமும்.....!
எனக்கான
வரமும்
சாபமும்.....!
என்
புன்னகையும்
கண்ணீரும்.....!
எனது
ஜனனமும்
மரணமும்.....!
Monday 31 August 2009
Sunday 30 August 2009
வாசம்..!
Saturday 29 August 2009
நினைவுறுத்தல்..!
Thursday 27 August 2009
வழியெங்கும்...
உன் முகம் தேடி
அலைகின்றதென்
பார்வை!
உயிர் தீண்டும் - உன்
பார்வைக்கென
பரிதவிக்கும் - என்
உள்ளம்!
உனைச் சேராமல்
இதழ்களில்
தேங்கி நிற்கும்
என் முத்தம்!
உன் செவி
உணருமோ - என்
உயிர் துடிக்கும்
சத்தம்!
ஒரு வழிப்பாதை..!
Wednesday 26 August 2009
மரணத்தினும் கொடிது..!
ஏதுமின்றிப் போக
மௌனத்தால் உரையாடுகிறாய்.
மரணத்தினும்
கொடியதாம் பிரிவு
பிரிவினும் வலிது
உன் மௌனம்.
உனக்கான
என் வார்த்தைகளை
உனக்குள்ளேயே
தொலைத்துவிட்டு
நானும்
மௌனத்தில்
மூழ்குகிறேன்
.
Tuesday 25 August 2009
பாராமுகம்..!
தினம் தினம் வருவேன் நான்!..!
இரவினிலே,
மொட்டைமாடி
தனிமையிலே,
நட்சத்திரம்
எண்ணுவதாய்
உனைத்தான்
எண்ணியிருப்பேன்!
காற்றோடு
காற்றாக
கருங்குயிலின்
பாட்டாக,
உள்வாங்கும்
மூச்சாக
உன்னுள்ளே
கரைந்திருப்பேன்!
உறக்கத்தில்
கனவாக,
உணர்வினில்
சுடராக,
வழியோடு
துணையாக,
நீங்காது - உன்
நினைவாயிருப்பேன்!
விழியோடு
ஒளியாக,
உடலோடு
உயிராக,
உன்னோடு
நானிருப்பேன்!
இலக்கின்
பாதையாக,
பாதையின்
நிழலாக,
நிழலின்
சுகமாக
உனக்காக
என்றும் நான்!
தாலாட்டும்
தாயாக,
தூங்கும் நேரம்
மடியாக,
துயில் கலைக்கும்
விடியலாக
தினம் தினம்
வருவேன் நான்!
கற்பூரம்..!
காற்றில் கரையும்
கற்பூரம்....
உன்னிடம் பேசுவதற்காய்
சேமித்த சொற்கள்!
வெம்மையில் விழுந்த
வெண்பனி துண்டம்.....
உன்னுடன் கழித்த
உன்னத நொடிகள்!
Monday 24 August 2009
உற்சாகம் உனையும்
பூக்கச் செய்வதாய்
கூறினாய்....
எனது
மௌனம் உனை
மரிக்கச் செய்வதாய்
மறுகினாய்...
எனது
பார்வை உனை
பலவீனமாக்குவதாய்
பதறினாய்....
எனது
வார்த்தைகள்
மனதின் காயங்களுக்கு
மருந்தென கூறி
மகிழ்ந்தாய்...
உனது பிரிவு
எனது
மரண சாசனமென - ஏனோ
மறந்துவிட்டாய்!
Saturday 22 August 2009
பிரிவு
போகத்தான் வேண்டும்
பிறந்ததிலிருந்து பிரியாதிருந்த
சொந்த மண் விட்டு
போகத்தான் வேண்டும்!
கரியமிலம் கலந்திருந்தபோதும்
சுதந்திரம் தரும்
சொந்த ஊர் சுவாசக் காற்றைவிட்டு
போகத்தான் வேண்டும்!
மனதினில் சுமந்து மகளென
வரித்துக் கொண்டுவிட்ட
மலர்முக தங்கையை விட்டு
போகத்தான் வேண்டும்!
கூடி குலவி நின்று
கொட்டங்கள் பல அடித்த
நண்பர் குழாம் விட்டு
போகத்தான் வேண்டும்!
கெண்டைக் கயலாடும் - என்
மனதோடு உறவாடும்
கோவில் தெப்பக் குளம் விட்டு
போகத்தான் வேண்டும்!
துன்பத்தில் தோள் கொடுத்த
இன்பத்தில் பங்கெடுத்த
இஷ்ட தெய்வம் தனை விட்டு
போகத்தான் வேண்டும்!
விடுமுறை மாலைகளில்
விளையாட்டாய் வலம் வந்த
தேர் வீதி தனை விட்டு
போகத்தான் வேண்டும்!
சகோதரர்கள் பலரிருக்க
சகோதரிகளும் கணக்கற்றிருக்க
கன்னி நான் மட்டும்
போகத்தான் வேண்டும்!
உள்ளாடும் காதலை ஒழித்து,
இதயத்தின் ஏமாற்றத்தை மறைத்து,
இதழ்களில் புன்னகையை ஒட்டவைக்கும்
என் இனிய நண்பனே
உனை விட்டும்
போகத்தான் வேண்டும்!
தனிமையே
சுகம் சொர்க்கமென
புலம்பியதெல்லாம்
பொய்யாகிபோனதின்று!
தனிமையில் கழிந்த
ஒவ்வொரு நொடியிலும்
உயிர் வலி கண்டது!
என் செல்லமே.....
பயிற்சி வகுப்பிற்கு
உன்னை அனுப்பிவிட்டு,
பாதை பார்த்து
பாவை - என்
பார்வை பூத்ததடி!
மகளென மனப்பூர்வமாய்
வரித்துக் கொண்ட பின்னும்
மடத்தனமாய்
கொட்டிவிடும் வார்த்தைகள்
தனிமையில்தான்
எனை நாராய்க்
கிழித்துப் போடும்!
போதுமடி பெண்ணே,
பொசுக்கென்று ஓடிவந்து
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு
காதோரம் பூவிதழ் மலர்ந்து
'அம்மா' என வேண்டாம்
'அக்கா' என
ஒருமுறை சொல்லி சென்றால்
உயிர் கொஞ்சம் மலர்வேன்!
உன் மொழியும்தான்
எனைத் தவிர
எவருக்கும் புரிவதில்லை
என்னை எனக்கு
உணர்த்திவிட்டு
சப்த சமுத்திரத்தில் -நீ
காணாமல் போய்விட்டாய்
இரவின் மொழியை
மீண்டும் மீண்டும்
கேட்டபோதும்
உன் குரல் மட்டும்
ஒலிக்கவேயில்லை
உன் மொழி தேடும்போதினில்
நிசப்தமான மனதில் கூட
அலைகளின் ஆரவாரம்
உன் மௌனத்தில் நான்
பல்லாயிரம் பாடல் கேட்கிறேன்
நம்முடைய ராஜ்ஜியத்தில் நீ
மௌனமாய் என்னுடன் பேசுகிறாய்
உன் மௌனமே எனைத்
துயிலச் செய்யும் தாலாட்டாகிறது
அதுவே எனைத் துயிலெழுப்பும்
பறவைகள் ரீங்காரமாகிறது
இரைச்சல் அலைதனில்
தத்தளிக்கையில்
கரை சேர்க்கும் தோணியுமாகிறது
.
வாசலை பார்த்தபடியே
கழிகிறது வாழ்க்கை....
உனது வார்த்தைக்காய்
காத்திருந்தபடியே
நகர்கின்றன நாட்கள்!
Friday 21 August 2009
இலக்கணம்
எதுவென
அறிந்ததில்லை....
எதுகை,
மோனை,
இயைபு
எதுவும்
தெரியாதெனக்கு....
இருந்தபோதும்
எழுதத்தூண்டியது
நமது காதல்
.
Thursday 20 August 2009
உறவுகள்
உடனிருந்தும்,
நினைவினில் நிறைந்த
நண்பர்கள்
நீங்காதிருந்தும்,
மனம் மயக்கும்
மெல்லிசைதானிருந்தும்
நான் மட்டும்
தனித்திருக்கிறேன்
சின்னஞ்சிறு தீவினில்!
.
கோபத்தையும்
கணநேரப்
புன்னகையில்
கரைத்து விடுவான்...
வலிகள் தந்து - பின்
வசந்தமும் தருவான்...
சிறுசிறு சண்டைகளிட்டு
மனம் சிதறச் செய்வான்...
மனதின் ரணங்களை
மலர்கர வருடலினால்
மரிக்கச் செய்வான்...
அழ அழச் செய்து,
திரும்பி வந்து
பின்கழுத்தை
கட்டிக்கொண்டு
காதோரமாய் சொல்வான்
'I LOVE YOU'
அம்மா!
Wednesday 19 August 2009
சமைத்தேன்....
பார்த்து பார்த்து
பசியாற்றினேன்...
விரும்பியதை
வேண்டும் முன்
தந்தேன்....
நள்ளிரவில்
கழுத்தை
கட்டிக்கொண்டு
தூங்கும்போதுதான்
யோசித்தேன்...
நாளையுடன்
விடுமுறை
முடிவதை
எப்படி சொல்வது....
விடுதியிலிருந்து
விடுமுறையில்
வீடு வந்த
தங்கையிடம்!
உருண்டோடும்
கண்ணீர்த்துளிகளில்
தொக்கி நிற்கிறது
உனக்கான
என் வார்த்தை....
எனை நோக்கி
வீசப்படும் - உன்
அலட்சிய பார்வையில்
வலி கொள்கிறது
வாழ்க்கை!
Tuesday 11 August 2009
சாலையில்
அனைவரும்
பார்க்க
டாட்டா காட்டிவிட்டு..
வெயிலுக்கு
இதமாய்
பறக்கும் முத்தத்தை
வீசி சென்றான்...
சில அடிதூரம்
சென்று
திரும்பிப் பார்த்தேன்..
கூடுதலாய்
குறும்பு
புன்னகையையும்
பரிசளித்துச்
சென்றான்...
அம்மாவின்
தோளில் சாய்ந்தபடி!
.
Sunday 9 August 2009
அங்கங்கே
காணப்படும்
rubber stamp ன்
முத்திரைகள்...
அலுவலக
computer ன்
MS Paint ல்
வரைவதாய்
அள்ளி தெளித்துப் போன
வண்ணகலவை...
கடைகளில்
கண்ணாடி பாட்டிலுக்குள்
சிறையிருக்கும்
Five Star Chocalate.....
படுக்கையறையின்
மூலையில் கிடக்கும்
Carrom Board...
பக்கத்து வீட்டின்
கண்ணாடித் தொட்டிக்குள்
நீந்திக் கொண்டிருக்கும்
வண்ண மீன்கள்.....
video Game
பெட்டிக்குள்
சுற்றி வரும்
Car Race
விளையாட்டுடன்
Cartoon விளையாட்டுக்கள்...
அனைத்தும்
அனுதினமும்
நினைவுறுத்துகின்றன
சித்தியான என்னை
"அக்கா" என்றழைத்த
தர்ஷினி குட்டியை!
Saturday 8 August 2009
இழந்து தவிக்கும்
எனைப்
பார்த்து
பரிகசித்தபடி
எனது
சுயத்தினைக்
கொன்றுவிட்டு
தனது
இருப்பினை
பதிவு செய்கிறது
இந்த காதல்!
சொல்லிவிட்டாய்
"எனது விலகலுக்காய்
வருந்தாதே....."
கரம்பற்றியபடி
கதை பேசியிருந்ததும்....
மடியில் தலைசாய்த்து
துயில் கொண்டதும்.....
துயரம் கொள்கையில்
தோள்களை நனைத்ததும்....
கடற்கரைவெளியில்
காலடிகள் பதித்ததும்.....
நிலவொளியில்
கவிதைகள் வாசித்ததும்....
மழைச்சாரல் நனைக்க
ஒற்றைகுடை பிடித்து
நடந்ததும்.....
பேருந்தின் நெரிசலுக்குள்
உன் வாசம் நானும்
என் வாசம் நீயும்
உணர்ந்ததும்....
இவையனைத்தையும்
மறப்பது எளிதானால்
எளிதுதான்
உனது விலகலை
ஏற்பதும்!
Thursday 9 July 2009
Sunday 5 July 2009
நள்ளிரவின்
மௌனத்தில்
கனவின்
கைதட்டலில்
உறக்கம்
கலைந்து
பார்த்தேன்....
எதிரினிலமர்ந்து
எனையே
கொட்டகொட்ட
பார்த்தபடியிருந்த
உன் காதலை!
ஒரே வழித்தடத்தில்
பயணிக்கிறோம்
வெவ்வேறு திசை
பார்த்தபடி....
உனக்கும்
எனக்குமான
இடைவெளி
வான் நோக்கும்
மண்ணிற்கும்
விழத்துடிக்கும்
மழைத்துளிக்குமானதாய்....!
Friday 26 June 2009
துரத்துவதும்
துரத்தபடுவதுமாய்
அலையோடு
விளையாடிக்கொன்டிருந்தாள்
சிறுமி!
வைத்த கண்
வாங்காமல்
ரசித்துவிட்டு
நகர்ந்தபின்தான்,
காணவில்லையென
கவனித்து
திரும்பி
பார்த்தேன்....
அவளது
கரம் கோர்த்தபடி
குதியாட்டம்
போட்டுக்கொண்டிருந்தது
என் மனசு!
கடற்கரை
ஈரத்தில்
உன்கரம் பற்றி
கதை பேசியபடி
காலாற நடந்திருந்தேன்
ஏதோ நினைவில்
திரும்பில் பார்த்தேன்,
எனது பாத சுவடருகே
காணப்படாத
உனது பாத சுவடு
நினைவுறுத்தியது
நீயில்லாத தனிமையை.....!
Tuesday 26 May 2009
தயங்கி தயங்கி
எனை
தழுவிக் கொண்டிருக்கும்
தூக்கத்தினை
கொஞ்சமும்
தயங்காமல்
துரத்திகொண்டிருக்கிறது
உனது
நினைவு.....!
இயல்பினை
இழந்து
தவிக்கும்
எனைப் பார்த்து
பரிகசித்தபடி
எனது
சுயத்தினை
கொன்றுவிட்டு
தனது
இருப்பினை
பதிவு செய்கிறது
இந்த காதல்!
Friday 22 May 2009
பொம்மைக்காய்
அடம்பிடித்து
கடையினின்று
நகர மறுக்கும்
குழந்தையாய் - நீ
எனை
நீங்கி சென்ற
இடத்தினின்று
அசைய மறுக்கும்
மனம்......!
ஒரு வழிப் பாதையென
தெரிந்த பின்னும்
தொடர்கின்றது
பயணம்.....
எதிரினில் - நீ
வருவாயெனும்
குருட்டு நம்பிக்கையில்!
Sunday 10 May 2009
Thursday 30 April 2009
உனது
குரலை
நினைவுறுத்தும்
காதினில் விழும்
வார்த்தைகள்...
உனது
இயல்பினை
பதிவு செய்யும்
கண்களில் நிறையும்
காட்சிகள்...
கவிதை
கற்றுத்தரும்
உனது
மௌனங்கள்...
இதழ்கோடியில்
சிறுபுன்னகையை
நெளியவிடும்
உனது
குறுந்தகவல்கள்...
நாம்
சந்தித்த
உச்சிவெயிலின்
வெம்மை கூட
வாழ செய்கிறது
நமது
நட்பினை...!