Wednesday 11 November 2009

வீடும் கூடும்


எடுத்துக்கொண்ட
வீட்டிற்கு பதிலாக
மழை விட்டுச் சென்ற
கூட்டினுள்
வளைய வந்தபடியுள்ளது
சின்னஞ்சிறு அணிற்குஞ்சு.

18 comments:

V.N.Thangamani said...

சின்னஞ்சிறு அழகிய கவிதைக்கு நன்றி.

வேல் கண்ணன் said...

Very Good. சில மாற்றங்கள் தெரிகிறது கல்யாணி
உன் வரிகளில். நேரம் எடுத்து கொள்வதால்... தானே ?

இன்றைய கவிதை said...

அருமையான பதிவு!
ரொம்ப நல்லாருக்கு, மேடம்!

-கேயார்

(Mis)Chief Editor said...

அடடே! இதுதான் 'கூட்டுக் கவிதையா?!'

Selvaraj Jegdheesan said...

Nice one KS.
some suggestions/corrections:

எடுத்துக்கொண்ட
வீட்டிற்கு பதிலாக
மழை விட்டுச் சென்ற
கூட்டினுள்
வளைய வந்தபடி இருந்தது
சின்னஞ்சிறு அணிற்குஞ்சு.

Also, link your blog to Tamilmanam.net to reach many.

Unknown said...

Nice one.

Suggestion:

Correct வீட்டினுக்கு to வீட்டிற்கு.

தமிழ் அமுதன் said...

goog...sorry ....வெரிகுட்...!

நேசமித்ரன் said...

கவிதை நல்லா இருக்குஙக

கல்யாணி சுரேஷ் said...

@ வி.என்.தங்கமணி
நன்றி.

@ வேல் கண்ணன்
அது மட்டுமல்ல, உதை வாங்கிட கூடாதுங்கற பயமும் ஒரு காரணமா இருக்கலாம்.

@ இன்றைய கவிதை
நன்றி கேயார். (madam வேண்டாமே pl )

@ (Mis)Chief Editor
இருக்கலாம். ஏன் னா நான் ஒரு கூட்டு குயில்.

@ Selvaraj ஜெகதீசன்
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.

@ ஜீவன்
நன்றி ஜீவன்.

@ நேசமித்ரன்
நன்றி நேசமித்ரன்.

velji said...

cute like a squirrel!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல குட்டிக்கவிதை...

பா.ராஜாராம் said...

மிக அருமையான கவிதை கல்யாணி! கல்யாணிக்கு ஒரு பெசல் டீ.....அண்ணன் கணக்குல.

கல்யாணி சுரேஷ் said...

@ velji
நன்றி.

@ பிரியமுடன்...வசந்த்
நன்றி.

@ பா.ராஜாராம்
பெசல் டீ கிடைச்சுது.

நிலாரசிகன் said...

மிகச்சிறந்த கவிதை கல்யாணி! எவ்வளவு நுட்பமான கவனிப்பு. வியக்கிறேன்.

"வீட்டிற்கு பதிலாக" என்றிருந்தால் இன்னும் வாசிக்க அருமையாக இருக்கும்.

வாழ்த்துகள்.:)

கல்யாணி சுரேஷ் said...

@ நிலாரசிகன்
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.

Anonymous said...

வெரிகுட் சொல்லியாச்சு.. நீங்க கேட்டதுக்காக இல்லீங்க.. உண்மையிலேயே கவிதை அருமை. சரி நானும் உங்கள் ஊரைச்சேர்ந்தவன் என்பதால் உங்களைப்பற்றி அறிய விரும்புகிறேன்.
கலைச்சோலை
பாரதிமோகன்

தேவன் மாயம் said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ ? என்று தோன்றினாலும் நல்லாயிருக்கு!!

கல்யாணி சுரேஷ் said...

@ பாரதிமோகன்
நன்றி பாரதி. என்னை பற்றிய தகவல் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருக்க கூடும்.

@ தேவன் மாயம்
நன்றி தேவன். இன்னும் எழுத கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

Post a Comment