Monday 24 August 2009

எனது
உற்சாகம் உனையும்
பூக்கச் செய்வதாய்
கூறினாய்....
எனது
மௌனம் உனை
மரிக்கச் செய்வதாய்
மறுகினாய்...
எனது
பார்வை உனை
பலவீனமாக்குவதாய்
பதறினாய்....
எனது
வார்த்தைகள்
மனதின் காயங்களுக்கு
மருந்தென கூறி
மகிழ்ந்தாய்...
உனது பிரிவு
எனது
மரண சாசனமென - ஏனோ
மறந்துவிட்டாய்!

1 comment:

கண்ணன் said...

//உனது பிரிவு
எனது
மரண சாசனமென - ஏனோ
மறந்துவிட்டாய்! //
நெஞ்சை வதைக்கும் வரிகள் தோழி

Post a Comment