Thursday 20 August 2009

கவிந்திருக்கும்
கோபத்தையும்
கணநேரப்
புன்னகையில்
கரைத்து விடுவான்...
வலிகள் தந்து - பின்
வசந்தமும் தருவான்...
சிறுசிறு சண்டைகளிட்டு
மனம் சிதறச் செய்வான்...
மனதின் ரணங்களை
மலர்கர வருடலினால்
மரிக்கச் செய்வான்...
அழ அழச் செய்து,
திரும்பி வந்து
பின்கழுத்தை
கட்டிக்கொண்டு
காதோரமாய் சொல்வான்
'I LOVE YOU'
அம்மா!

3 comments:

கண்ணன் said...

ஒற்றை வரியில் மறந்து போகும்
துயர் அனைத்தும்
அருமை

goma said...

ஒற்றைக்குயில் அழகாகக் கூவுகிறது.

கல்யாணி சுரேஷ் said...

nanri kannan.
varugaikkum paarattukkum nanri goma.

Post a Comment