
ஒரு மழை நாளில்
சந்தடி ஏதுமற்ற
சாலையில்தான் எனைக்
கடந்து சென்றாய் ......!
என் மனதினுக்கும்
உன் மனதினுக்கும்
மழை பாலமானது.....!
பார்வை மட்டுமே
பாஷை என்றிருந்து - பின்
புன்னகை கூட மொழியானது....!
சிறு சிறு வார்த்தைகள்
சினேகம் வளர்க்க,
நட்பின் தென்றல் தீண்டி - நம்
நேசம் மலர்ந்தது.........!
உனதன்பை வெளிப்படுத்திய- அந்த
விநாடியிலிருந்துதான்
உன்னை நேசித்த நான்
மழையையும் நேசித்தேன்.....!
உன்னுடன் கரம் கோர்த்து
நனைந்தபடி நடந்து சென்ற
மழை நாள் இன்னமும்
மனதினுள் ஈரமாகவே........!
இப்போதும்....
மழையின் தூறலைத்
தீண்டும்போது கூட - உன்
கரம்பற்றுவதான உணர்வு....!
மழையும் நம்மிருவருடன்
வாழ்வின் அங்கமாயிற்று...!
இன்றும் மழை நாள்தான்.....!
மழையில் நனைந்தபடி நானும்
என்னுள் கரைந்தபடி மழையும்...!
நீ மட்டுமில்லாத தனிமையில்.......?