Thursday 8 October 2009

11.10.09 தேதியிட்ட கல்கி இதழில் வெளியான எனது கவிதை.
நன்றி : கல்கி.


நடக்கும்போது
சுகமாய்த்தானிருந்தது,
உன் கரம் பற்றியிருந்தேன்...
ஏனோ
இப்போது
வலிக்கின்றன
கால்கள்,
தனிமையில் நான்!

18 comments:

velji said...

பாராட்டுக்கள்! கல்கியில் பிரசுரமாவது பெருமைக்குரிய விஷயம்.தொடருங்கள்!(அப்படியே எங்க ஏரியாக்கும் வந்து கருத்து சொன்னா நல்லாயிருக்கும்..)

இன்றைய கவிதை said...

அடுத்தவரைச் சார்ந்திருக்கும்போது
சுகமாய்த்தான் இருக்கிறது!

அருமையான கவிதை!

பித்தனின் வாக்கு said...

// இப்போது
வலிக்கின்றன
கால்கள்,
தனிமையில் நான்! //
நல்ல வேளை கடைசி வரியில் தனிமையில் நான் சொல்லிட்டாங்க இல்லைனா கால் அமுக்குனு சொல்வாங்களே. கொஞ்சம் பயந்துட்டன்.
ஆனா சொன்ன செய்துதான் ஆகனும் ஏன்னா நம்ம தங்கமணி ஆச்சுங்களே. நல்ல கவிதை.

கல்யாணி சுரேஷ் said...

@ velji
நன்றி velji. கண்டிப்பா உங்க ஏரியாவுக்கும் வரேன்.

@ இன்றைய கவிதை
நன்றி.

@ பித்தனின் வாக்கு
கருத்தினுக்கு நன்றி.
//கால் அமுக்குனு சொல்வாங்களே//
அப்படியெல்லாம் கஷ்டப்படுத்த மாட்டேன்.

நிலாரசிகன் said...

:)

கல்யாணி சுரேஷ் said...

@ நிலாரசிகன்
நன்றி.

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க.

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கருணாகரசு.

கார்த்திகா said...

Dear Vijikka, Blog-la vasitha kavithaiyai Kalki-la vasithu marupadi blog la vasithen. :) Romba nalla irukku. Ippadiye adikkadi niraiya magazines ku anuppunga. :)

Karthika

கல்யாணி சுரேஷ் said...

@ கார்த்திகா
Thanks dear(for all). :-)

பா.ராஜாராம் said...

குட்டிம்மா,இன்னும் இருக்குடா உன் பயணம்...பற..

சந்தோசங்கள் நிறைந்த உன் அண்ணா.

கல்யாணி சுரேஷ் said...

@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா. உங்களை போன்றவர்களின் ஆசிர்வாதங்களும், ஆதரவும் தான் காரணம். மீண்டும் ஒரு முறை எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

+Ve Anthony Muthu said...

வாழ்துக்கள் தங்காய்.
மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன்.

கல்யாணி சுரேஷ் said...

@ +VE Anthony Muthu
Thanks anna. :)

butterfly Surya said...

எளிமையான அழகான கவிதை.

வாழ்த்துகள்.

கல்யாணி சுரேஷ் said...

@ butterfly Surya
வருகைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றி.

R.Gopi said...

அருமையான கவிதை கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்... கூடவே இது பிரசுரமாகலேன்னா தான் ஆச்சரியம்...

அவ்ளோ நல்லா இருக்கு... பிரிவின் வேதனையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியுமா என்ன??

வாழ்த்துக்கள் கல்யாணி சுரேஷ்........

கல்யாணி சுரேஷ் said...

@ R.Gopi
வாழ்த்தினுக்கு நன்றி.

Post a Comment