Monday 3 May 2010

வானவில் தருணம்.


நீள்கின்ற மௌனக்கோடு
இயம்புகிறது
இருவருக்குமான இடைவெளியை

சிறைப்பட்டிருக்கும் வார்த்தைகளை
விடுவிப்பதற்கான சாவி
உன்னிடமிருப்பதாய் நானும்
என்னிடமிருப்பதாய் நீயும்
பாவனை செய்கிறோம்

சிறு விசும்பல்
அழிக்கக் கூடும்
மௌனக் கோட்டினை

ஒற்றைத் துளி
உடைக்கக் கூடும்
சிறைக் கதவுகளை

ஊடல் உடைபடுமொரு
வானவில் தருணத்திற்கென
காத்திருக்கிறோம் உள்ளபடியே.

.

8 comments:

பா.ராஜாராம் said...

இன்று வாசித்த மிக சிறந்த கவிதை இது.

fantastic kalyani!

ரௌத்ரன் said...

நல்லாயிருக்கு கவிதை..

Unknown said...

நல்லாயிருக்குங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான கவிதை... ஊடலே ஒரு கவிதை தான்... அதை பத்தி ஒரு கவிதை இன்னும் அழகு... (எல்லாம் சரி, ஊடல் சரி ஆச்சா இல்லையா கல்யாணி சிஸ்டர்)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க....

அன்புடன் நான் said...

யதார்த்தம்.....

பாராட்டுக்கள்.

கல்யாணி சுரேஷ் said...

அனைவருக்கும் நன்றி.

எட்வின் said...

அருமைங்க... வாழ்த்துக்கள்

Post a Comment