Monday 25 October 2010
உணர்விருக்கை
பேருந்து நிறுத்த
சிமெண்ட் இருக்கையிடம்
இருக்கக் கூடும்
எண்ணற்ற கதைகள்
முக்கிய சாலையிலிருந்து
ஒதுங்கி நிற்கும்
கிராமத்து மாந்தர்களின்
நடைபயண குறிப்புகள்
சுமை தூக்கிகளாய்
பள்ளி செல்லும்
சின்னஞ் சிறுசுகளின்
கண்களில் மின்னும்
வண்ணக் கனவுகள்
'என் ஆளு வருவா
நீ போடா மாப்ள'
காத்திருக்கும்
இளவட்டங்களின்
இனிய அவஸ்தைகள்
ஜன சந்தடிகள்
ஏதுமற்ற போதுகளில்
தனிமையில் காயும்
நண்பகலின் வெறுமை
அடக்கி வைப்பார்
யாரும் இல்லாமல்
துள்ளி நடமிடும்
மேகக் குழந்தையின்
வியர்வைக் கதைகள்
கூடவே....
கூப்பிடு தூரத்தில்
இல்லாத நீ
அருகினில் அமர்ந்து
கைகோர்த்து பேசுகின்ற
பல கதைகளும்
.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அழகு கவிதை.... வாழ்த்துக்கள் தோழி....
--
அன்புடன்
கவிநா...
Post a Comment