Thursday 3 February 2011

ஆலமும் அமிர்தமும்

துளி 7

என்னுள்ளே
நிறைந்து தளும்புகிறது
வெறுமை
நிறைத்திட
புன்னகை பூங்கொத்துடன்
வருகிறது
உன் காதல்

துளி 8

எதுவுமே
எழுதவில்லையா
கேட்ட தோழிக்கு
எப்படி பதிலளிப்பது
ஆயிரமாயிரம் கவிதைகளாய்
நீ மட்டுமே
நிறைந்திருப்பதை


துளி
9

உள்ளிருந்தபடி பயணிக்கும்

இன்னொரு உயிர்
நீ

5 comments:

rvelkannan said...

ரொம்ப நல்ல இருக்கு கல்யாணி
இறுதி கவிதையில் அதிர்வு அதிகம் கல்யாணி

Anonymous said...

good post

JK said...

மிகவும் அருமை கல்யாணி சுரேஷ்

நன்றாய் ரசித்தேன்

நன்றி
ஜேகே

Unknown said...

//உள்ளிருந்தபடி பயணிக்கும்
இன்னொரு உயிர்
நீ//

ஆனால் இது உயிரை வாங்கும் உயிர்!

vgnesh89 said...

Thuli 9: a deep sensational word, having lot of meanings but only in two lines:-):-):-):-) my hearty congrats:-):-):-):-):-). Expecting more from you as like this type:-):-):-):)

Post a Comment