Tuesday 25 August 2009
பாராமுகம்..!
உன் பாராமுகம்
பார்த்து
பதறுகிறேன் நான்
உன் மௌனத்தினால்
எனைச்
சிதைக்கிறாய் நீ
சோக சமுத்திரத்தின்
நடுவில் நான்
கரையின்
வெளிச்சமென
உன் புன்னகை
சுடுமணல்
பாலையில்
வெற்றுகால்களுடன்
நான்
வெந்துபோன
பாதத்தின்
வேதனை
மாற்றும்
சோலையாய் நீ
தூறலுக்கு
தவமிருக்கும்
தரிசு நிலமென
நான்
தாகம் தீர்க்கும்
தண் மழையென
நீ
.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிக அருமை.
படங்களும்...
அருமை மிக அருமை தொடருங்கள்
Thanks to Antonna & Kannan
Post a Comment