Friday, 18 December 2009

ஒன்றா? இரண்டா?


"பெடம்மா (பெரியம்மா)
அத புடி"
காதினில் விழுகிறது - எனது
சின்னஞ்சிறு தேவனின் குரல்,
நடந்து செல்லும் என்னை
கடந்து செல்கிறது ஒரு ஆட்டுக்குட்டி!

"குடு (குரு) phone ஐ எங்க?"
குட்டி நண்பனின்
கேள்வியாய் ஒலிக்கிறது,
செல்லிடபேசியின் மணியோசை!

"அம்மாதான் என் best friend"
என் பாலாவின்
வார்த்தைகளாய் விரிகிறது,
நண்பர்கள் தினத்தின்
குறுஞ்செய்தி வாழ்த்துகள்!

"பிச்சி பூ ன்னா
உனக்கு பைத்தியமாச்சே
அதான் வாங்கினேன்" - என்னும்
பூங்கொடி அத்தையின்
பிம்பம் தெரிகிறது,
நீர் நிறைந்து ஓடும்
தாமிரபரணியில்!

"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!

"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"


(‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

Monday, 14 December 2009

புன்னகை வெளிச்சம்


ஜன்னல் வழியே
யானையை கண்டு
கை தட்டி சிரித்தாள்
சிறுமி
விசையை தட்டியதும்
அறையெங்கும் பரவும்
மின்விளக்கின் ஒளியென
இரயில் பெட்டியெங்கும்
பரவியது புன்னகை


.

Sunday, 6 December 2009

நானும் நீயும்


என் தனிமையில்
நிரம்பியிருப்பவை
மௌனமும்
கவிதையும்
மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது வெறுமையில்
உடனிருப்பது
மெல்லிசை
மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!

Wednesday, 2 December 2009

நீலவானம்


குழந்தைகளிடமிருந்து
பெற்றுக்கொண்ட
மகிழ்ச்சியை
அம்மாக்களுக்காய்
விட்டுச் செல்கிறது
மழை.....
விடைபெற்று
போகுமொரு நாளின்
நீல வானத்தில்..........!

Wednesday, 11 November 2009

வீடும் கூடும்


எடுத்துக்கொண்ட
வீட்டிற்கு பதிலாக
மழை விட்டுச் சென்ற
கூட்டினுள்
வளைய வந்தபடியுள்ளது
சின்னஞ்சிறு அணிற்குஞ்சு.

Friday, 6 November 2009

வாசனை எச்சம்!


நீ என் மார்பினில்
கிடந்துறங்கிய காலங்களில்
மேனியெங்கும் உடையென
படர்ந்திருந்தது உன் வாசனை.
எனை கட்டிக்கொண்டு
தூங்கிய போதுகளில்
எனதருகினில் இருக்கையிட்டு
அமர்ந்திருந்தது
அதே வாசனை.
தனித் தனி அறைகளில்
தூங்கிய போது
காற்றினில் வரும்
நறுமண புகையென
கரைந்து விட்டிருந்தது
அந்த வாசனை.
உனது மடியினில்
நானுறங்க வேண்டிய நாட்களிலோ,
நீராழி கடந்தொரு
தேசத்தில் நீயும்
நினைவுகளில் வாசனை
எச்சங்களோடு நானும்



.

Thursday, 15 October 2009

ஒளியும் ஒலியும்


திருவிழா கடைகளில்
தொங்க விடப்பட்டிருக்கும்
அலங்கார மின் விளக்குகள்,
காதினில் ஒலிக்கிறது
என் குட்டி தேவனின்
சந்தோஷக் கூக்குரல்.





.

Tuesday, 13 October 2009

ப(ம)றந்து போன பச்ச கிளி

கண்ணுக்குள்ள
பொத்திவச்ச மவ
எங்கண்ண மறச்சுப்புட்டு
காணாம போயிபுட்டா

நெஞ்சுக் குழிக்குள்ள
நெருப்பள்ளி போட்டு
நெல கொலய வச்சுப்புட்டா

பதியம் போட்டு
பாத்து பாத்து வளர்த்த
பட்டு ரோசா
பூத்து சிரிக்கறத
பாக்க காத்திருந்தேன்
கண்ணசந்த வேளையில
களவு போனதென்ன?

பாலூட்டி வளர்த்த
எம் பச்ச கிளி
பொல்லாத பூனையோட
கை புடிச்சு போனதென்ன?

பாவி மவளுக்கு பந்த பாசம்
இல்லாம போனதென்ன?

பைத்தியம் புடிச்சதாட்டம்
நான் பரிதவிச்சு நிப்பதென்ன?



.

Friday, 9 October 2009

பகிர்ந்துகொண்ட விருது.




ராஜாராம் அண்ணா எனக்கு பகிர்ந்தளித்த இந்த விருதினை நான் இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. +ve அந்தோணிமுத்து - இனிய +VE அந்தோணி முத்து
2. வேல்கண்ணன் - வேல் கண்ணன்
3. கார்த்திகா - நேயமுகில்
4. சாம் தாத்தா - சாம் தாத்தாவின் சிந்தனைகள்
5. தமயந்தி - தமயந்தி - நிழல் வலை
6. வேல்ஜி---ஜெயபேரிகை
7. அருண் -
கார்ல்ஸ்பெர்க் வார்த்தைகள்
8. ஞானியார் ரசிகவ் - நிலவு நண்பன்

Thursday, 8 October 2009

11.10.09 தேதியிட்ட கல்கி இதழில் வெளியான எனது கவிதை.
நன்றி : கல்கி.


நடக்கும்போது
சுகமாய்த்தானிருந்தது,
உன் கரம் பற்றியிருந்தேன்...
ஏனோ
இப்போது
வலிக்கின்றன
கால்கள்,
தனிமையில் நான்!

Thursday, 1 October 2009

தவிக்கும் உயிர்.


சரமாரியாய்
தொடுக்கின்றாய்
விஷம் தோய்த்த உன்
வார்த்தைக் கணைகளை.
மழைக் கம்பிகளை
ஏந்துதல் போலும்
தாங்கிக் கொள்கிறேன் நான்.
அனுதினமும் எனை
அபிஷேக்கிறாய்
அனலேறிய உன் பார்வையால்.
நெருப்பினை விழுங்கிவிட்டு
நீரினைக் குடித்து
தணித்துக் கொள்கிறேன்.
சாவினைச் சுமந்தென்னை
துரத்துகின்ற
என்னிடமிருந்தான உன்
விலகலுக்கும்
வாழ்வினை நோக்கி எனை
இழுத்துச் செல்லும்
உன் மீதான என்
காதலுக்குமிடையில்
சிக்கித் தவிக்கிறது
எனது உயிர்.


.

Friday, 25 September 2009

இன்றும் மழை நாள்தான்..!


ஒரு மழை நாளில்
சந்தடி ஏதுமற்ற
சாலையில்தான் எனைக்
கடந்து சென்றாய் ......!

என் மனதினுக்கும்
உன் மனதினுக்கும்
மழை பாலமானது.....!

பார்வை மட்டுமே
பாஷை என்றிருந்து - பின்
புன்னகை கூட மொழியானது....!

சிறு சிறு வார்த்தைகள்
சினேகம் வளர்க்க,

நட்பின் தென்றல் தீண்டி - நம்
நேசம் மலர்ந்தது.........!

உனதன்பை வெளிப்படுத்திய- அந்த
விநாடியிலிருந்துதான்
உன்னை நேசித்த நான்
மழையையும் நேசித்தேன்.....!

உன்னுடன் கரம் கோர்த்து
நனைந்தபடி நடந்து சென்ற
மழை நாள் இன்னமும்
மனதினுள் ஈரமாகவே........!

இப்போதும்....
மழையின் தூறலைத்
தீண்டும்போது கூட - உன்
கரம்பற்றுவதான உணர்வு....!

மழையும் நம்மிருவருடன்
வாழ்வின் அங்கமாயிற்று...!

இன்றும் மழை நாள்தான்
.....!

மழையில் நனைந்தபடி நானும்
என்னுள் கரைந்தபடி மழையும்...!

நீ மட்டுமில்லாத தனிமையில்
.......?

Wednesday, 23 September 2009

வலியும் வலிமையும்


உயிரையே சுட்ட போதும்
உனது சிறு சிறு விலகல்
அத்தியாவசியமே.
இடி தாங்கும் வலிமை பெற
அடி தாங்கி பழகுதல்
என்றும் நலமே.
"உறங்குதல் போலும் சாக்காடு"
வள்ளுவன் வாய்மொழி போல்
ஊடல் போலும் விலகலே



.

Tuesday, 22 September 2009

பிள்ளைப்பருவம்

கிடைத்த காலம்
கொஞ்சமென்றாலும்
வாழ்ந்த பொழுதுகள்
அதிகம்தான்.......
முடிவில்
மனம் கனத்தாலும்
ஒன்றுமில்லாததாய்
வெறுமையான உணர்வு!
நிலைத்திருக்கும்
நிஜமில்லை,
கரைந்து விடும்
கானல்தான்....
ஆயினும்
போ(வே)கும் வரையிலும்
தித்திடும் எண்ணங்கள்!
விடுமுறை முடிந்து
பள்ளி செல்கையில்
முதுகில்
புத்தகச் சுமையோடு,
இனிமையான நாட்கள்
மனதிலும்........
வேலைக்குப் போகும்
இன்று வரையிலும்
அந்த
கோடைவசந்தம்
எனக்குப்
பிள்ளைப்பருவம்தான்!

Wednesday, 16 September 2009

அம்மாச்சி

எல்லா வீட்டிலும்
இருக்கக் கூடும் - ஒரு
கதை சொல்லி!
எங்கள் வீட்டிலும்
இருந்ததுண்டு.
மந்திர தந்திர
கதைகளில்
ஆர்வம் வளர்த்தவள்....
நிலாச் சோற்றின்
சுவை காட்டியவள்....
பெண்மையின் வரம்புகள்
அறிவுறுத்தியவள்....
தாய்மையின் அருமையை
உணர்த்தியவள்.....
அம்மாவுக்கு மட்டுமில்லாமல்
எனக்கும்
அம்மாவானவள்...
இருந்தவரையில்
இதமளித்ததில்லை நான்.....
ஏனோ இப்போது
தவிக்கின்றேன்....
கடைசியாய்
கொடுத்து போன
புடவையில்
அவள் வாசம்
உணர்கிறேன்!

Saturday, 12 September 2009

வாழ்வின் உயிர்


உண்பதுவும்
உடுப்பதுவுமே
இயந்திரத்தனமான
பின்னரும்......
உன் கரம் கோர்த்து
நடை பயின்ற
தடங்களும்,
உன் தோள் சாய்ந்து
கதை பேசிய
கணங்களின்
நினைவுகளுமே
மிஞ்சி நிற்கும்
வாழ்வினுக்கு
உயிரூட்டுகின்றன!

Wednesday, 9 September 2009

புரிதல் என்னும் இழை


வார்த்தைகள் மரித்துப் போக
வாய் மூடி மௌனியாகின்றோம்

உனது தரப்பை நீயும்
எனது தரப்பை நானும்
மௌனத்தால் வாதிடுகிறோம்

'சாப்பிட்டாச்சா?'

'கடைக்கு கிளம்பியாச்சா?'

'தலைவலி சரியாகிடுச்சா?'

வந்து விழுகின்றன
கேள்விகள்
சம்பிரதாயமாய்...

புரிதல் என்னும்
இழைதான்
இழுத்து நிறுத்துகிறது,
எதிரெதிர் துருவங்களை
நோக்கி நகர்கின்ற
நம்மையும்
நம் நட்பினையும்!





Monday, 7 September 2009

தேவதை


மற்றவர்
மனதை
புரிந்து கொள்ளும்
தேவதை உள்ளம்
சில நேரங்களில்தான்
வாய்க்கப்பெற்றிருக்கிறது
எனக்கு



.

ஞாபகங்கள்

உனக்கான
ஞாபகங்கள்
காணாமல்
போய்க் கொண்டிருக்கின்றன...
உன் ஞாபகத்தைத்
தவிர!

Friday, 4 September 2009

சில கூடுகளும் - ஒரு கூண்டும்

இருபது நாள்
வெளியூர் பயணத்தில்
இழந்திருந்தேன்
தோழர்களை.
கூடுகளிருந்த
இடத்தில் நிற்கிறது
செங்கற்களாலான ஒரு
கூண்டு.




.

Thursday, 3 September 2009

கண்ணாடி நட்பு




கை நழுவிய
கண்ணாடி
குடுவையென
சிதறிய நட்பினை
சேர்த்தெடுத்து
ஒட்டிவைக்கிறேன்.
இருந்தபோதும்
பசையின்
அடையாளமாய் - என்
மனதின்
தழும்புகள்.


.

Wednesday, 2 September 2009

தோழன்





விளக்குகளற்ற
வெளியில்
தனியாய்
சென்றுகொண்டிருந்தேன்....
வீடு வரையில்
கதை பேசியபடி
துணையாய்
வந்தது நிலா



.

Tuesday, 1 September 2009

இயல்பு

எனதியல்பினில்
நிலைக்கவே
முயல்கிறேன்.
இயல்பினை
இடறித்
தடம் புரட்டி
செல்கிறாய் நீ.




.

பசுமை


தரையில் எழும்
பச்சை நிற அலைகள்......
அசைந்தாடும் வயல்வெளி


.

மௌனம் போதும்..!

கண் முன்னே
காதலைச்
சிதைக்கும்
வார்த்தையாடல்களினை
விடவும்.
நினைவுகளின்
துணையுடன்
வாழ்வினுக்கு
உயிரூட்டும்
நம் மௌனம்
போதும் நமக்கு


.

உனதுறவு

எனது
பலமும்
பலவீனமும்.....!
எனக்கான
வரமும்
சாபமும்.....!
என்
புன்னகையும்
கண்ணீரும்.....!
எனது
ஜனனமும்
மரணமும்.....!

Monday, 31 August 2009

மிச்சம்..!

அறுவடை
முடிந்த
வயல்வெளியாய்
மனது.......
மீந்திருக்கும்
கதிரின்
மிச்சமென - உன்
நினைவு



.

Sunday, 30 August 2009

வாசம்..!


தன் வாசனையை
என்னிடமே
விட்டுப் போயிருந்தாள்,
ஒரு மணிநேர
பயணத்தில் - என்
மடியில்
அமர்ந்து சென்ற
சிறகில்லா
சின்னஞ்சிறு
தேவதை.




.

Saturday, 29 August 2009

முள்..!


நெடுநாள் பின்
நள்ளிரவின் தரிசனம்.
உறக்கமின்றி
உருண்டு புரள்கையில்
படுக்கையில்
முள்ளாய்
உன் நினைவு


.

நினைவுறுத்தல்..!


உனை
நினைவுறுத்தவும்,
உன் பெயர்
கூறுவதற்கும்,
என்னில்
வார்த்தையும்,
எண்ணங்களும்
மட்டுமல்ல.
கைகளில் வளையல்,
கால்களில் கொலுசு,
காதினில் ஜிமிக்கி,
கண்களில் கனவு,
விரல் நுனியில்
கவிதை.



.

Thursday, 27 August 2009

வழியெங்கும்...

வழியெங்கும்
உன் முகம் தேடி
அலைகின்றதென்
பார்வை!
உயிர் தீண்டும் - உன்
பார்வைக்கென
பரிதவிக்கும் - என்
உள்ளம்!
உனைச் சேராமல்
இதழ்களில்
தேங்கி நிற்கும்
என் முத்தம்!
உன் செவி
உணருமோ - என்
உயிர் துடிக்கும்
சத்தம்!

பயணங்கள்


நீயில்லாத
பயணங்கள்
நிலவில்லாத
வானமாகிறது!

ஒரு வழிப்பாதை..!


என்
எண்ண ஏட்டில்
உனக்கான பக்கங்கள்
வெற்றிடமாகவே
இப்போதும்
எப்போதும்.
என் மீதான
உனது அபிப்ராயம்
ஒற்றையடிப்
பாதையல்ல,
ஒரு வழிப்பாதை


.

Wednesday, 26 August 2009

மரணத்தினும் கொடிது..!

பகிர்தலுக்கு
ஏதுமின்றிப் போக
மௌனத்தால் உரையாடுகிறாய்.
மரணத்தினும்
கொடியதாம் பிரிவு
பிரிவினும் வலிது
உன் மௌனம்.
உனக்கான
என் வார்த்தைகளை
உனக்குள்ளேயே
தொலைத்துவிட்டு
நானும்
மௌனத்தில்
மூழ்குகிறேன்



.

Tuesday, 25 August 2009

பாராமுகம்..!


உன் பாராமுகம்
பார்த்து
பதறுகிறேன் நான்
உன் மௌனத்தினால்
எனைச்
சிதைக்கிறாய் நீ
சோக சமுத்திரத்தின்
நடுவில் நான்
கரையின்
வெளிச்சமென
உன் புன்னகை
சுடுமணல்
பாலையில்
வெற்றுகால்களுடன்
நான்
வெந்துபோன
பாதத்தின்
வேதனை
மாற்றும்
சோலையாய் நீ
தூறலுக்கு
தவமிருக்கும்
தரிசு நிலமென
நான்
தாகம் தீர்க்கும்
தண் மழையென
நீ



.

தினம் தினம் வருவேன் நான்!..!

உறக்கமில்லா
இரவினிலே,
மொட்டைமாடி
தனிமையிலே,
நட்சத்திரம்
எண்ணுவதாய்
உனைத்தான்
எண்ணியிருப்பேன்!
காற்றோடு
காற்றாக
கருங்குயிலின்
பாட்டாக,
உள்வாங்கும்
மூச்சாக
உன்னுள்ளே
கரைந்திருப்பேன்!
உறக்கத்தில்
கனவாக,
உணர்வினில்
சுடராக,
வழியோடு
துணையாக,
நீங்காது - உன்
நினைவாயிருப்பேன்!
விழியோடு
ஒளியாக,
உடலோடு
உயிராக,
உன்னோடு
நானிருப்பேன்!
இலக்கின்
பாதையாக,
பாதையின்
நிழலாக,
நிழலின்
சுகமாக
உனக்காக
என்றும் நான்!
தாலாட்டும்
தாயாக,
தூங்கும் நேரம்
மடியாக,
துயில் கலைக்கும்
விடியலாக
தினம் தினம்
வருவேன் நான்!

கற்பூரம்..!

கண்களறியாமல்
காற்றில் கரையும்
கற்பூரம்....
உன்னிடம் பேசுவதற்காய்
சேமித்த சொற்கள்!
வெம்மையில் விழுந்த
வெண்பனி துண்டம்.....
உன்னுடன் கழித்த
உன்னத நொடிகள்!

Monday, 24 August 2009

வெளிச்சத்தில் தேடி..!


இருட்டில்
தொலைத்துவிட்ட
உன்னை
வெளிச்சத்தில்
தேடித் திரிந்து
தவிக்கிறேன்!

இழப்பு..!


கடல் அலையும்,
கடற்கரை மணலும்,
நினைவுறுத்துகிறது
உன் அருகாமையின்
இழப்பினை.......!

அறிவிப்பு..!




பின்பனி காலம்...
அதிகாலை......
கண்காணா தூரத்தில்
ஒற்றைகுயில்.....
தொட்டுவிடும் தொலைவில்
வெயில்






.
எனது
உற்சாகம் உனையும்
பூக்கச் செய்வதாய்
கூறினாய்....
எனது
மௌனம் உனை
மரிக்கச் செய்வதாய்
மறுகினாய்...
எனது
பார்வை உனை
பலவீனமாக்குவதாய்
பதறினாய்....
எனது
வார்த்தைகள்
மனதின் காயங்களுக்கு
மருந்தென கூறி
மகிழ்ந்தாய்...
உனது பிரிவு
எனது
மரண சாசனமென - ஏனோ
மறந்துவிட்டாய்!

Saturday, 22 August 2009

எப்போது படித்தாலும் பத்து வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்கிறது எனது இந்த கவிதை(?)

பிரிவு

போகத்தான் வேண்டும்
பிறந்ததிலிருந்து பிரியாதிருந்த
சொந்த மண் விட்டு
போகத்தான் வேண்டும்!
கரியமிலம் கலந்திருந்தபோதும்
சுதந்திரம் தரும்
சொந்த ஊர் சுவாசக் காற்றைவிட்டு
போகத்தான் வேண்டும்!
மனதினில் சுமந்து மகளென
வரித்துக் கொண்டுவிட்ட
மலர்முக தங்கையை விட்டு
போகத்தான் வேண்டும்!
கூடி குலவி நின்று
கொட்டங்கள் பல அடித்த
நண்பர் குழாம் விட்டு
போகத்தான் வேண்டும்!
கெண்டைக் கயலாடும் - என்
மனதோடு உறவாடும்
கோவில் தெப்பக் குளம் விட்டு
போகத்தான் வேண்டும்!
துன்பத்தில் தோள் கொடுத்த
இன்பத்தில் பங்கெடுத்த
இஷ்ட தெய்வம் தனை விட்டு
போகத்தான் வேண்டும்!
விடுமுறை மாலைகளில்
விளையாட்டாய் வலம் வந்த
தேர் வீதி தனை விட்டு
போகத்தான் வேண்டும்!
சகோதரர்கள் பலரிருக்க
சகோதரிகளும் கணக்கற்றிருக்க
கன்னி நான் மட்டும்
போகத்தான் வேண்டும்!
உள்ளாடும் காதலை ஒழித்து,
இதயத்தின் ஏமாற்றத்தை மறைத்து,
இதழ்களில் புன்னகையை ஒட்டவைக்கும்
என் இனிய நண்பனே
உனை விட்டும்
போகத்தான் வேண்டும்!
12 வருடங்களின் பின்னர் அரங்கேறும் எனது தவிப்பு!

தனிமையே
சுகம் சொர்க்கமென
புலம்பியதெல்லாம்
பொய்யாகிபோனதின்று!
தனிமையில் கழிந்த
ஒவ்வொரு நொடியிலும்
உயிர் வலி கண்டது!
என் செல்லமே.....
பயிற்சி வகுப்பிற்கு
உன்னை அனுப்பிவிட்டு,
பாதை பார்த்து
பாவை - என்
பார்வை பூத்ததடி!
மகளென மனப்பூர்வமாய்
வரித்துக் கொண்ட பின்னும்
மடத்தனமாய்
கொட்டிவிடும் வார்த்தைகள்
தனிமையில்தான்
எனை நாராய்க்
கிழித்துப் போடும்!
போதுமடி பெண்ணே,
பொசுக்கென்று ஓடிவந்து
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு
காதோரம் பூவிதழ் மலர்ந்து
'அம்மா' என வேண்டாம்
'அக்கா' என
ஒருமுறை சொல்லி சென்றால்
உயிர் கொஞ்சம் மலர்வேன்!
இரவின் மொழி மௌனம்,
உன் மொழியும்தான்
எனைத் தவிர
எவருக்கும் புரிவதில்லை
என்னை எனக்கு
உணர்த்திவிட்டு
சப்த சமுத்திரத்தில் -நீ
காணாமல் போய்விட்டாய்
இரவின் மொழியை
மீண்டும் மீண்டும்
கேட்டபோதும்
உன் குரல் மட்டும்
ஒலிக்கவேயில்லை
உன் மொழி தேடும்போதினில்
நிசப்தமான மனதில் கூட
அலைகளின் ஆரவாரம்
உன் மௌனத்தில் நான்
பல்லாயிரம் பாடல் கேட்கிறேன்
நம்முடைய ராஜ்ஜியத்தில் நீ
மௌனமாய் என்னுடன் பேசுகிறாய்
உன் மௌனமே எனைத்
துயிலச் செய்யும் தாலாட்டாகிறது
அதுவே எனைத் துயிலெழுப்பும்
பறவைகள் ரீங்காரமாகிறது
இரைச்சல் அலைதனில்
தத்தளிக்கையில்
கரை சேர்க்கும் தோணியுமாகிறது




.
உன் நினைவால்
தவிக்கும் போதெல்லாம்
எனக்குள்
கண்ணீர் மட்டுமல்ல,
கவிதையும்
ஊற்றெடுக்கும்!
உனது வரவினுக்காய்
வாசலை பார்த்தபடியே
கழிகிறது வாழ்க்கை....
உனது வார்த்தைக்காய்
காத்திருந்தபடியே
நகர்கின்றன நாட்கள்!
குழந்தையென மாறி
குதூகலிக்கிறது
மனது.....
கொட்டுகிறது மழை



.
சோம்பலுடனும் -சிறு
சோகத்துடனும்
கழிகிறது
உனைக் காணாத
பொழுதுகள்




.

Friday, 21 August 2009

ஊரெங்கும்
அலைந்து
திரிந்து
ஓய்ந்த
வேளையில்
உன்னிடத்தில்
மட்டுமே
நிலைகொள்ளும்
மனது!
ஆளற்ற வெளி.....
காலடியில் நிழல்.....
நினைவில் நீ!
கவிதையின்
இலக்கணம்
எதுவென
அறிந்ததில்லை....
எதுகை,
மோனை,
இயைபு
எதுவும்
தெரியாதெனக்கு....
இருந்தபோதும்
எழுதத்தூண்டியது
நமது காதல்


.
கவிதை....
தனிமை....
மழை....
மார்கழி பனி....
மெல்லிசை....
நீள்பயணம்....
நீயும்!



.
இலைகள்
உதிர்ந்துவிட
தனிமையில்
நிற்கும் மரம்.....!



.

Thursday, 20 August 2009

உயிரினில் கலந்த
உறவுகள்
உடனிருந்தும்,
நினைவினில் நிறைந்த
நண்பர்கள்
நீங்காதிருந்தும்,
மனம் மயக்கும்
மெல்லிசைதானிருந்தும்
நான் மட்டும்
தனித்திருக்கிறேன்
சின்னஞ்சிறு தீவினில்!



.
கவிந்திருக்கும்
கோபத்தையும்
கணநேரப்
புன்னகையில்
கரைத்து விடுவான்...
வலிகள் தந்து - பின்
வசந்தமும் தருவான்...
சிறுசிறு சண்டைகளிட்டு
மனம் சிதறச் செய்வான்...
மனதின் ரணங்களை
மலர்கர வருடலினால்
மரிக்கச் செய்வான்...
அழ அழச் செய்து,
திரும்பி வந்து
பின்கழுத்தை
கட்டிக்கொண்டு
காதோரமாய் சொல்வான்
'I LOVE YOU'
அம்மா!

Wednesday, 19 August 2009

உனைச்
சந்திக்கப்போவதான
எதிர்பார்ப்புடன்
தொடங்குகின்ற
தினங்கள்
ஏக்கத்துடனே
முடிவடைகின்றன!
பிடித்ததாய்
சமைத்தேன்....
பார்த்து பார்த்து
பசியாற்றினேன்...
விரும்பியதை
வேண்டும் முன்
தந்தேன்....
நள்ளிரவில்
கழுத்தை
கட்டிக்கொண்டு
தூங்கும்போதுதான்
யோசித்தேன்...
நாளையுடன்
விடுமுறை
முடிவதை
எப்படி சொல்வது....
விடுதியிலிருந்து
விடுமுறையில்
வீடு வந்த
தங்கையிடம்!
கன்னங்களில்
உருண்டோடும்
கண்ணீர்த்துளிகளில்
தொக்கி நிற்கிறது
உனக்கான
என் வார்த்தை....
எனை நோக்கி
வீசப்படும் - உன்
அலட்சிய பார்வையில்
வலி கொள்கிறது
வாழ்க்கை!

Tuesday, 11 August 2009

அரவம் மிகுந்த
சாலையில்
அனைவரும்
பார்க்க
டாட்டா காட்டிவிட்டு..
வெயிலுக்கு
இதமாய்
பறக்கும் முத்தத்தை
வீசி சென்றான்...
சில அடிதூரம்
சென்று
திரும்பிப் பார்த்தேன்..
கூடுதலாய்
குறும்பு
புன்னகையையும்
பரிசளித்துச்
சென்றான்...
அம்மாவின்
தோளில் சாய்ந்தபடி!







.

Sunday, 9 August 2009

அலுவலகத்தில்
அங்கங்கே
காணப்படும்
rubber stamp ன்
முத்திரைகள்...

அலுவலக
computer ன்
MS Paint ல்
வரைவதாய்
அள்ளி தெளித்துப் போன
வண்ணகலவை...

கடைகளில்
கண்ணாடி பாட்டிலுக்குள்
சிறையிருக்கும்
Five Star Chocalate.....

படுக்கையறையின்
மூலையில் கிடக்கும்
Carrom Board...

பக்கத்து வீட்டின்
கண்ணாடித் தொட்டிக்குள்
நீந்திக் கொண்டிருக்கும்
வண்ண மீன்கள்.....

video Game
பெட்டிக்குள்
சுற்றி வரும்
Car Race
விளையாட்டுடன்
Cartoon விளையாட்டுக்கள்...

அனைத்தும்
அனுதினமும்
நினைவுறுத்துகின்றன
சித்தியான என்னை
"அக்கா" என்றழைத்த
தர்ஷினி குட்டியை!

Saturday, 8 August 2009

இயல்பினை
இழந்து தவிக்கும்
எனைப்
பார்த்து
பரிகசித்தபடி
எனது
சுயத்தினைக்
கொன்றுவிட்டு
தனது
இருப்பினை
பதிவு செய்கிறது
இந்த காதல்!
எளிதெனில் எளிதே!
எளிதாய்
சொல்லிவிட்டாய்
"எனது விலகலுக்காய்
வருந்தாதே....."
கரம்பற்றியபடி
கதை பேசியிருந்ததும்....
மடியில் தலைசாய்த்து
துயில் கொண்டதும்.....
துயரம் கொள்கையில்
தோள்களை நனைத்ததும்....
கடற்கரைவெளியில்
காலடிகள் பதித்ததும்.....
நிலவொளியில்
கவிதைகள் வாசித்ததும்....
மழைச்சாரல் நனைக்க
ஒற்றைகுடை பிடித்து
நடந்ததும்.....
பேருந்தின் நெரிசலுக்குள்
உன் வாசம் நானும்
என் வாசம் நீயும்
உணர்ந்ததும்....
இவையனைத்தையும்
மறப்பது எளிதானால்
எளிதுதான்
உனது விலகலை
ஏற்பதும்!
அமாவாசை
தினத்திலும்
நிலவின்
தண்மையை
சுகித்திருக்கிறேன்
உனது
கரம் பற்றியபடி...
சாலையோரத்தில்
கிடந்த
ரப்பர் பொம்மை
உணர்த்தியது,
அதைத்
தவறவிட்ட
குழந்தையின்
வலியை...

Thursday, 9 July 2009

காதினில்
செருகிய
earphone உடன்
அருகினில் நீ.......
தனிமையில் - என்
பேருந்து
பயணம்....!



.

Sunday, 5 July 2009

நள்ளிரவின்

மௌனத்தில்

கனவின்

கைதட்டலில்

உறக்கம்

கலைந்து

பார்த்தேன்....

எதிரினிலமர்ந்து

எனையே

கொட்டகொட்ட

பார்த்தபடியிருந்த

உன் காதலை!

ஒரே வழித்தடத்தில்

பயணிக்கிறோம்

வெவ்வேறு திசை

பார்த்தபடி....

உனக்கும்

எனக்குமான

இடைவெளி

வான் நோக்கும்

மண்ணிற்கும்

விழத்துடிக்கும்

மழைத்துளிக்குமானதாய்....!

Friday, 26 June 2009

எழுதுகோல்!

சிறுவயதில்

எனது

விரல் பிடித்து

எழுதபழக்கிய

அம்மாவின்

விரல்!

வலிந்து நான்

இழுத்துக்கொண்டிருக்கும்

உறக்கத்தை,

என் மீது

ஊர்ந்தபடி

விரட்டிக்கொண்டிருக்கிறது

உனது பிரிவு!

துரத்துவதும்

துரத்தபடுவதுமாய்
அலையோடு

விளையாடிக்கொன்டிருந்தாள்

சிறுமி!

வைத்த கண்

வாங்காமல்

ரசித்துவிட்டு

நகர்ந்தபின்தான்,

காணவில்லையென

கவனித்து

திரும்பி

பார்த்தேன்....

அவளது

கரம் கோர்த்தபடி

குதியாட்டம்

போட்டுக்கொண்டிருந்தது

என் மனசு!

கடற்கரை
ஈரத்தில்

உன்கரம் பற்றி

கதை பேசியபடி

காலாற நடந்திருந்தேன்

ஏதோ நினைவில்

திரும்பில் பார்த்தேன்,

எனது பாத சுவடருகே

காணப்படாத

உனது பாத சுவடு

நினைவுறுத்தியது

நீயில்லாத தனிமையை.....!


Tuesday, 26 May 2009

"தனியே

நடைபயிற்சிக்கு

போகிறேன்" என

கவலை கொள்ளும்

உறவினுக்கு

எப்படி

புரியவைப்பது

ஆகாய

அழகனும்

உடன் வருவதை...!

தயங்கி தயங்கி

எனை

தழுவிக் கொண்டிருக்கும்

தூக்கத்தினை

கொஞ்சமும்

தயங்காமல்

துரத்திகொண்டிருக்கிறது

உனது

நினைவு.....!

இயல்பினை

இழந்து

தவிக்கும்

எனைப் பார்த்து

பரிகசித்தபடி

எனது

சுயத்தினை

கொன்றுவிட்டு

தனது

இருப்பினை

பதிவு செய்கிறது

இந்த காதல்!

ஏற்றுக்கொள்ளப்படாத

மன்னிப்பினுக்கு....

இணையாகின்றன....

உனக்கான

எனது

கடிதங்கள்!

Friday, 22 May 2009

பொம்மைக்காய்

அடம்பிடித்து

கடையினின்று

நகர மறுக்கும்

குழந்தையாய் - நீ

எனை

நீங்கி சென்ற

இடத்தினின்று

அசைய மறுக்கும்

மனம்......!

உனை

சந்திக்கப் போவதான

எதிர்பார்ப்புடன்

தொடங்குகின்ற

தினங்கள்

ஏக்கத்துடன்

முடிவடைகின்றன!

ஒரு வழிப் பாதையென

தெரிந்த பின்னும்

தொடர்கின்றது

பயணம்.....

எதிரினில் - நீ

வருவாயெனும்

குருட்டு நம்பிக்கையில்!


விட்டு விலகி

நெடுந்தொலைவு

வந்தபின்னும்

காலடியில்

குறுகுறுக்கிறது

கடற்கரை மணல்....

நின் நினைவுகள்!

Sunday, 10 May 2009

காற்றில்
மிதக்கின்றன
பூமிப் பந்துகள்...
துரத்தியபடி
ஓடிக் கொண்டிருக்கிறாள்
சிறுமி




.
விரல்கள்
என்னவோ
என்னுடையவைதான்....
ஸ்பரிசம் மட்டும்
உனதாக
உணர்கிறேன்




.

Thursday, 30 April 2009

உனது

குரலை

நினைவுறுத்தும்

காதினில் விழும்

வார்த்தைகள்...

உனது

இயல்பினை

பதிவு செய்யும்

கண்களில் நிறையும்

காட்சிகள்...

கவிதை

கற்றுத்தரும்

உனது

மௌனங்கள்...

இதழ்கோடியில்

சிறுபுன்னகையை

நெளியவிடும்

உனது

குறுந்தகவல்கள்...

நாம்

சந்தித்த

உச்சிவெயிலின்

வெம்மை கூட

வாழ செய்கிறது

நமது

நட்பினை...!

Wednesday, 29 April 2009

உன்னுடன்

பேசாதிருந்தும்

ஜீவித்திருக்கிறது

நமது நட்பு!

உனது

குரல் மட்டும்

கேட்டபடியே